பத்தொன்பது வயது வரை கொண்டிருந்த வைராக்கியம் அம்மா அப்பா பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்து கொள்வது என்பது. அது பெற்றவர்களுக்கு செய்யும் மரியாதை என்று நம்பின எனக்கும் காதல் வந்தது.
மலையாளியை மணக்கக் கூடாது என்ற சபதத்துக்கு ஏற்ப தமிழ் இளைஞர் மனதை ஆட்கொண்டார். இரண்டு வருடங்கள் சந்திப்புகள் சினிமாக்கள் என்று ஓடிய தெய்வீக காதலை வீட்டில் சொன்னேன்.
(அப்பவே நாங்க அப்பிடி. நான்தான் வீட்டில் முதலில் போட்டு உடைத்தேன்) அம்மா பத்து நாட்கள் மண்டகப் படி பூஜை நடத்தியும் நான் கொண்ட கொள்கையில் மாறாது போகவே அப்பாவிடம் தகவல் பரிமாற்றம் செய்யப்பட அடுத்த வடிவம் பெற்றது என் தெய்வீக காதல்
பெற்றவர்களின் கூட்டு ஆலோசனையின் முடிவில் காதலனிடம் திருமணம் குறித்து பேச சென்றனர்.
அரிய தகவல் பெறப்பட்ட தினம் இன்று. அவருக்கு மலையாள பெண்ணை மணமுடிக்க எண்ணமே இல்லை என்பது தான் அது.
காதலர் தினமாவது பொடலங்கா தினமாவது. குடும்பமாக அவமானம் பட்ட தினம்.
மன்னிச்சுடுங்க லில்லி & ஜேம்ஸ்
No comments:
Post a Comment