நெருங்கிய உறவு ஒன்று விஷம் அருந்தி வாழ்வை முடித்துக் கொண்டது மற்றும் ஒரு சின்னத் திரை நடிகை தற்கொலையை எல்லாம் கேட்டு இதை சொல்கிறேன்.
இந்த வருடம் எதிர்பாராத பேரிடர்கள் நிறைய. கொரோனா, வருமானம் இழப்பு, புயல், வெள்ளம், வசிப்பிடம் இழப்பு இன்னும் ஏகப்பட்ட இழப்புகள் இவையெல்லாமே பேரிழப்புகள் தான்.
இவற்றோடு முக்கியமான இழப்பு நம் உடனிருந்த சிலர் நோய் காரணமாகவோ தற்கொலைகள் காரணமாகவோ நம்மை விட்டு பிரிகையில ஏற்படும் அதிர்வலைகள் இன்னமும் நம்மை அழுத்தவும் செய்கிறது.
நான் ஒரு ஒர்த்லெஸ், கையாலாகாதவள்/ன் என்ற எண்ணம் மிகப் பலரை எண்ணத் தோற்றுவிக்கிறது சூழ்நிலைகள். கூச்சமின்றி சொல்கிறேன், இந்த கொரோனா தாக்குதலுக்கு பிறகு என்னை மிகவும் ஆக்கிரமித்தது இந்த எண்ணம்.
ஆனால் இந்த உலகில் நீ இரண்டு கொம்புடன் பிறக்கவில்லை. ஜஸ்ட் மனிதப் பதர்தான் நீ என்று ஒட்டுமொத்த மனித குலத்தையும் பார்த்து கெக்கலித்து சிரிக்கிறது கோவிட்19.
இன்று மனுக்குலம் உயிருடன் இருந்தால் போதும் என்று மிரட்டிப் பணிய வைத்து இருக்கிறது ஒரு துக்கிளியூண்டு உயிரி.
ஒன்று சொல்கிறேன். அறிவுரை அல்ல. எனக்கே நான் சொல்லிக் கொண்டதை உங்களுக்கும் சொல்கிறேன். இன்றைய தேதியில் நம் உடல் நலத்தை பேணி நாம் உயிருடன் இருப்பது மிக முக்கியம். வைரஸ் மட்டுமின்றி இயற்கை கூட நம்மை உரசிப் பார்க்கும் காலத்தில் தற்கொலைகள் எவ்விதத்திலும் தீர்வாகாது.
எழுபது வயது கிழமெல்லாம் விரல் சொடுக்கி 'மாத்தணும், எல்லாத்தையும் மாத்தணும்' என்று நம்முன் நிற்க காண்கையில் நாம் நமது சொந்த வாழ்க்கையை சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டு வாழ எந்த விதத்தில் இவ்வுலகில் வாழத் தகுதியில்லாது போவோம்.
வலியது வாழும். இதுதான் உயிரியல் தத்துவம். அதனால் நாம் மனதாலும் உடலாலும் வலுவேற்றி உயிருடன் இருப்போம் முதலில்.
வீரவசனம் பேச இன்னும் நிறைய காலம் கிடைக்கும்.
No comments:
Post a Comment