கார்......
கஜினி மொட்டைமாடி கல்பனா சொன்ன மாதிரி எங்கப்பாவும் ஒரு அம்பாஸடர் மற்றும் மூன்று ஆட்டோவுக்கு முதலாளியாக இருந்தார். நான் நான்காவது படிக்கும்போது ஒரு சிட்பண்ட் காரன் ஏமாத்தின பொழுது அனைத்தையும் விற்று ஒரு லாரி நிறைய வீட்டு சாமான்கள் மற்றும் அம்பது பவுன் நகையுடனும் திருச்சியில் செட்டில் ஆனோம்.
அன்று முதல் 2004ல் அப்பா மரணிக்கும் வரை கார் வெறும் கனவாகவே இருந்தது அவருக்கு.
ஆனால் எனது கார் கனவு மாருதி வந்த பிறகுதான். அதன் ஒவ்வோர் மாடலும் என்னால் கூர்ந்து நோக்கப் படும். ஆனால் அதில் கால் வைக்க கூட நேரம் வரவில்லை. 2000ம் ஆண்டு வாங்க வேண்டும் என்று வைத்த கோல் 2002, 2004, 2005 2006 என்று போனது.
கடைசியில் 2007 அக்டோபரில் ஸென் எஸ்டிலோ சிவப்பு நிறத்தில் வாங்கியபோது பெருமையில் பூரித்துப் போறேன். கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து வருட கனவு நனவான தினம் அல்லவா அது.
போட்டோ இருந்தது. தேடிக் கொண்டு இருக்கிறேன். அது ஒரு குட்டி கார். அதில் பவர் ஸ்டீயரிங் அது இது என்று ஹை என்ட் மாடல். பெருமிதம் பொங்க ராமச்சந்திரன் ரிச்சர்ட் மற்றும் லெனர்ட் நான் என அனைவரும் டிரைவிங் ஸ்கூல் போய் பழகி லைசென்ஸ் வாங்கினோம்.
அப்படி பல சிறப்பு வாய்ந்த கார் அதன் பிறகு 2014ல் புத்தம்புது ஃபியட் புன்டோ எடுத்த போது மாருதி ரொம்பவும் பின் தங்கி இருப்பது உணர்ந்தோம். ஆயினும் மாருதி மீது கொண்ட அன்பில் துளிகூட குறையில்லை.
2015ல் கொள்ளை நோய் பன்றிக் காய்ச்சலால் சாகப் பிழைக்க கிடந்த போது துளி தயக்கமின்றி அனைத்து நகைகளையும் அடமானம் வைத்து பணம் கொடுத்து உதவின மருமகள் (நானெல்லாம் கொடுத்து வைத்த மாமியாராக்கும்)
நகையை திருப்பித் தராதது குறித்து மனது சிரமப் பட்ட என் கணவர் எங்கள் கனவு காரை olx தளத்தில் போட்டு இரண்டே நாளில் விற்க துணிந்தார்.
ஒரு பழனி காரர் ரெண்டு டப்பா பஞ்சாமிர்தம் உடன் கேஷ் கொடுத்து வாங்கிப் போனார். நானோ கணவரோ ரோட்டுக்கு போய் பார்க்கவே இல்லை. . அதன் வடுக்களை இப்போதும் சிவப்பு எஸ்டிலோ எங்கேனும் பார்த்தால் தடவிக் கொள்வோம்.
#உண்மையில்_அது_பெரும்_துயரம்
No comments:
Post a Comment