என்னுடைய சிறு வயது காலங்களில் கோவையில்தான் இருந்தோம். அப்போது பொங்கல் என்பது மிகவும் கொண்டாடப் படும் விஷயம். வீடுகளை வெள்ளை அடித்து சாணமிட்டு மெழுகி மாக்கோலம் போட்டு வைப்பார்கள். சிமெண்ட் தரைகளில் பெயிண்ட்டால் கலர் கலர் கோலம் போட்டும் வைப்பார்கள்.
முக்கியமாக அனைத்து வீடுகளும் இதே கெட்டப்பில் இருக்கும். மற்றும் எல்லா வீடுகளிலும் வேப்பிலை கொத்து சொருகி வைப்பார்கள், அதில் ஆவரம்பூ, பூளைப்பூ எல்லாம் சேர்ந்திருக்கும். வீடுகளில் வெளியே காணக் கூடியவைகள் இவை. வீட்டுக்குள் பொங்கல் படையலிட்டு சாமி கும்பிடுவார்கள் என்பதை தவிர தெரியாது.
சேலத்தில் ஒரு ஐந்து வருடங்கள் இருந்தோம். அங்கு பொங்கல் என்பது பெரும் பண்டிகை. எல்லோரும் பொங்கல் பணம் பெறுவர் அவரவர் தொழிலகங்களில்.
புதுச்சட்டை அணிவர். வண்டி வேடிக்கை என்பது மிகவும் பிரசித்தி. வண்ண வண்ண வேடமிட்டு நேர்ச்சை செலுத்துவர் கோவில்களில்.
இதோ சென்னையில் பத்து பந்தினைந்து வருடங்கள். பொங்கல் கொண்டாட்டம் என்றால் இவர்களுக்கு டயர் எரித்து மத்தளக்கொட்டு கொட்டி ....... என்ன்னத்தை சொல்ல.
சரி சரி எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment