படிப்பு.
அம்மா கல்வியை நம்பினார். அது மட்டுமே எங்கள் போல வர்க்கத்துக்கு முன்னேற்றத்தை தரும் என்பதை மிகவும் நம்பினார். எங்களை படிக்க வற்புறுத்தினார்.
எங்கள் சுழி அதை சரியாக புரிந்து கொள்ள விடவில்லை. அம்மாவை இந்த விஷயத்தில் நாங்கள் மூவருமே வெறுத்தோம்.
ஆயினும் எங்களை எங்கள் விருப்பங்களை மீறி படிக்க வைத்து ஜெயிக்க வைத்தார். உண்மையில் அவர் சொன்னது கேட்டு வளர்ந்து இருந்தால் ஒரு ஐஏஎஸ் ஐபிஎஸ் அளவுக்கு வளர்ந்து விட்டிருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.
ஆனாலும் நாங்கள் மூவருமே இன்று இந்த நிலைமையில் இருக்க காரணம் அம்மா கடினமான முறையை கையாண்டு கொடுத்த கல்விதான் கரணம்.
இன்று கல்வி மதிப்பெண் வாங்கும் ஒரு கருவி என்று கருதப் படுகிறது. எல்லாருக்கும் எல்லாத்திலும் முதல் இடத்துக்கு வர வேண்டும் என்பதே குறி. அதனால் பயன் என்ன என்றால் ஒரு மண்ணும் இல்லை.
பிறகேன் இத்தனை அழுத்தம் அது குறித்து. ஏன் பேத்தி மூணரை வயசாகிறது. லண்டனில் இருக்கிறாள். என்ன வேண்டுமானாலும் படிக்கட்டும். எவ்வளவு மார்க் வேணுமானாலும் வாங்கட்டும்.
கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு என்று புகுந்து புறப்பட்டு வர வேண்டும் என்பது என் ஆசை. என் கனவுகளை மகன்கள் சாதித்துக் கொடுத்துள்ளனர்.
அடுத்த இலக்கு அடுத்த தலைமுறை நோக்கி என் அம்மாவின் வழியில்...❤️
No comments:
Post a Comment